தமிழகத்தில் அரசு ஊழியர்கள் போராட்டம் – மின் வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் போராட்டம் - மின் வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் போராட்டம் - மின் வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் போராட்டம் – மின் வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் இன்று மின் வாரிய தலைமை அலுவலகம், மாவட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனால் மின்வாரிய ஊழியர்களின் வருகை பதிவு குறித்த அறிக்கை தொடர்பாக மின்வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மின் ஊழியர்கள் போராட்டம்

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட்டார். அதன்படி இவர்களுக்கு கடந்த ஜூலை 1ம் தேதி முதல் 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மின்வாரிய ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் மின்வாரிய ஊழியர்கள் தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

தமிழக அரசு துறைகளில் ஒன்றரை லட்சம் பணியிடங்கள் காலி – உடனடியாக நிரப்ப கோரிக்கை!

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரசு மின்வாரிய ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி வழங்கப்படும் என்ற அரசாணையை கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியிட்டது. இதையடுத்து தற்போது மேலும் சில கோரிக்கைகளை முன் வைத்து மின்வாரிய ஊழியர்கள் மின் வாரிய தலைமை அலுவலகம், மாவட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக இன்று முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த போராட்ட நேரத்தில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் இது தொடர்பாக மின்வாரியம் அறிவித்துள்ளதாவது, தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக மக்களுக்கான பணிகள் மற்றும் சேவைகள் பாதிப்படைய கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பணிபுரிய முன் வரக்கூடிய ஊழியர்களுக்கு தொழிற்சங்க பிரதிநிதிகள் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் பணிக்கு வராமல் உள்ள நபர்களின் பட்டியலை தயார் செய்து காலை 11 மணிக்கு முன்பாக தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!