அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் கொரோனா சிறப்பு விடுமுறை – மாநில அரசு அனுமதி!
கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்வதற்கு 7 நாட்கள் கொரோனா சிறப்பு சாதாரண விடுப்புக்கு அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
7 நாட்கள் விடுப்பு:
கேரளாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து பரவி வருகிறது. இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து பாதிப்புகள் அதிகமாவதால் கேரளாவில் மக்கள் வெளியில் செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வைரஸ் தொற்று குறையவில்லை. நாள் ஒன்றுக்கு 30,000 வரை பாதிப்புகள் பதிவாகி வருகிறது. நாட்டில் மொத்த வைரஸ் பாதிப்பில் 65% கேரளாவில் பதிவாகி உள்ளது. கடந்த மாதம் பக்ரீத் மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனால் மேலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பழைய ஐஸ்வர்யாவின் தன்னம்பிக்கை கருத்து – விஜெ தீபிகா ஓபன் டாக்!
இந்த நிலையில் கேரள அரசு கொரோனா பாதித்த அரசு ஊழியர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதற்காக 7 நாட்கள் கொரோனா சிறப்பு சாதாரண விடுப்பு அளிக்கப்பட்டது. கொரோனா உறுதி செய்யப்பட்ட அல்லது கொரோனா பாதித்தவருடன் நேரடி தொடர்பில் இருந்த அரசு ஊழியர்கள், அதற்குரிய சான்றிதழை சமர்ப்பித்து, 7 நாள்கள் சிறப்பு சாதாரண விடுப்பை எடுத்துக் கொள்ளலாம் என்று மாநில முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.
செப்.17 முதல் ‘இந்த’ மாவட்டத்தில் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – ஆட்சியர் உத்தரவு!
7 நாட்களுக்கு பிறகு கொரோனா இல்லை என்று சான்றிதழ் சமர்ப்பித்து மீண்டும் பணிக்கு வர வேண்டும். கடந்த மூன்று மாதங்களுக்குள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கொரோனா உறுதி செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அவசியமில்லை. ஒருவேளை அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இந்த சிறப்பு சாதாரண விடுப்பை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தன்னாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்த விடுப்பு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.