பல்கலைக்கழகங்களுக்கு பரந்த முக்கிய உத்தரவு – தமிழக ஆளுநர் ஆர். என். ரவி அதிரடி!
தமிழ்நாட்டு வரலாற்றில் மறக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண வேண்டும் என ஆளுநர் ஆர் என் ரவி உத்தரவிட்டுள்ளார். இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர்கள்:
இந்தியாவில் 74-வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள ராஜபாதையில் இன்று காலை குடியரசு தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைத்து அத்துடன் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் தொடங்கிய அணிவகுப்பு செங்கோட்டை வரை நடைபெற்றது.
Follow our Instagram for more Latest Updates
தலைநகர் டெல்லியை தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் குடியரசு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று ஆளுநர் ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது பேசிய அவர் நமது ராணுவத்திற்கும் அரசியலமைப்பை தந்த அம்பேத்கருக்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் காண வேண்டும். இதற்கான முயற்சியில் பல்கலைக்கழகங்கள் ஈடுபட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு பல்கலைக்கழகமும் குறைந்தது 5 சிறப்பு ஆராய்ச்சி மாணவர்களை நியமிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த ஆராய்ச்சி திட்டத்திற்கான ஃபெல்லோஷிப் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.