மகளிர் சுய உதவிக்குழுவின் கடன் தொகையை அரசு ஏற்பு? முதல்வருக்கு கோரிக்கை!
தமிழகத்தில் கொரோனா பொது முடக்கம் காரணமாக மகளிர் சுய உதவிக்குழு வங்கி கடன் தொகையை அரசே ஏற்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மகளிர் சுய உதவிக்குழு:
தமிழகத்தில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் சுமார் ஒரு மாத காலத்திற்கும் மேலாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள நடுத்தர மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். காரணம் கடந்த 2020 ஆண்டில் ஊரடங்கு காலத்தில் வங்கி மற்றும் மகளிர் சுய உதவிக்குழு கடன் தவணை செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.12,000 நிதியுதவி – மனு மீதான விசாரணை!
இதனால் தமிழக மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மகளிர் சுய உதவி குழுக்களில் கடன் பெற்றிருக்கும் குடும்ப தலைவிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால் வங்கி கடன் தவணையை அரசே ஏற்க வேண்டும் என்றும் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வருகிறது. தற்போது இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதன்படி அவர் கூறியதாவது, தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுவின் வங்கி கடன் தொகையை அரசே ஏற்க வேண்டும் என்றும் சுய உதவிக்குழுக்கள் சீராக செயல்பட புதிதாக கடன் பெறும் வழிவகைகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இது குறித்து ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.