அரசு மானியத்தில் எலெக்ட்ரிக் பைக் வாங்க திட்டமிடுபவர்கள் கவனத்திற்கு – முழு விபரங்கள் இதோ!

0
அரசு மானியத்தில் எலெக்ட்ரிக் பைக் வாங்க திட்டமிடுபவர்கள் கவனத்திற்கு - முழு விபரங்கள் இதோ!
அரசு மானியத்தில் எலெக்ட்ரிக் பைக் வாங்க திட்டமிடுபவர்கள் கவனத்திற்கு - முழு விபரங்கள் இதோ!
அரசு மானியத்தில் எலெக்ட்ரிக் பைக் வாங்க திட்டமிடுபவர்கள் கவனத்திற்கு – முழு விபரங்கள் இதோ!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏனெனில் இதில் இருந்து புகை ஏதும் வெளிவராமல் இருப்பதால் சுற்றுசூழல் பாதிப்பு அடையாமல் இருக்கும். அதனால் இதற்கு அரசும் மானியத்தை வழங்கி வருகிறது. தற்போது இதனை பற்றி விரிவாக பார்ப்போம்.

எலெக்ட்ரிக் பைக்

இந்திய நாட்டில் தற்போது வீட்டிற்கு ஒரு வாகனம் உள்ளதால் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் இந்த வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சு கலந்த புகையினால் சுற்றுசூழல் பாதிப்பு அடைகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு கையாண்டு வருகிறது. அதன்படி தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை களமிறக்கி உள்ளன. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க அரசு சார்பாக மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது எலெக்ட்ரிக் பைக் வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் 3 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு – PF பேலன்ஸை தெரிந்து கொள்வது எப்படி?

கடந்த 2021ம் ஆண்டு ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களின் அடாப்ஷன் மற்றும் தயாரிப்புக்கு ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் 2023ம் நிதியாண்டில் ரூ.2,908 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட மூன்றரை மடங்கு அதிகமாகும். மேலும் தற்போது நாளுக்கு நாள் எலெக்ட்ரிக் வாகனங்களின் தேவை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டின் முதல் மாதத்தில் பேட்டரி மூலம் இயங்கும் 27,555 வாகனங்கள் ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான FAME-2 திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இத்திட்டம் 2022ம் ஆண்டில் மார்ச் 31ம் தேதி அன்று முடிவடையும் நிலையில் தற்போது மார்ச் 31ம் தேதி 2024ம் ஆண்டு வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது இந்த FAME-2 திட்டத்தில் பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இதில் வழங்கப்படும் எலக்ட்ரிக் இருசக்கர வாகனகளுக்கான ஊக்கத்தொகை ரூ.10,000லிருந்து ரூ.15,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பித்து தங்களுக்கு பிடித்தமான எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை தள்ளுபடி விலையில் பெற முடியும். மேலும் இந்த திட்டத்தில் 200,000 எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் ஆதரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!