அக்னிபாத் வீரர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு பின் அரசுப்பணி? முதல்வர் உத்தரவு!
நாடு முழுவதும் இளைஞர்களை இந்திய ராணுவத்தில் நான்கு வருட ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல இடங்களில் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அக்னிபாத் திட்டத்தில் பணிமுடிந்து வரும் இளைஞர்களுக்கு அரசுப்பணி வழங்கப்படும் என மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
அக்னிபாத் திட்டம்:
இந்திய ராணுவ பணிகளுக்கு இளைஞர்களை அக்னிபாத் திட்டத்தின் மூலமாக தேர்வு செய்ய மத்திய அரசு கடந்த ஜுன் 20 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது. இந்த திட்டத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் அவர்களுக்கான எந்த சலுகையும் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வழக்கமான முறை படி ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என பல மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
குறிப்பாக உத்திர பிரதேசம், பீகார், ராஜஸ்தான், ஹரியானா, குஜராத், டெல்லி, மத்திய பிரதேசம், தெலுங்கானா என பல மாநிலங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தங்களது குடும்பங்களை விட்டு ராணுவத்தில் பணிபுரிந்து வரும் இளைஞர்களுக்கு நான்கு ஆண்டுகள் கழித்து வேலை இழந்த பின் எதிர்காலம் கேள்வி குறியாக இருக்கும் என்பதால் அக்னிபாத் திட்டத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல மாநில அரசுகள் அக்னிபாத் திட்டத்தில் இருந்த இளைஞர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு பின் வேலை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜாக்பாட் – ரூ.15,000 வரை ரொக்கப்பரிசு! அரசு முக்கிய அறிவிப்பு!
அந்த வகையில் ஹரியானா மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அக்னிபாத் திட்டத்தில் சேர்ந்து 4 ஆண்டுகள் பணி முடித்துவிட்டு வந்த வீரர்களில் 75 சதவிகிதம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். விருப்பம் உள்ளவர்கள் குரூப் சி பிரிவில் எந்த பணியிலும் சேர்ந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். மேலும் மாநில காவல்துறையிலும் பணி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.