தமிழகத்தில் நீட் பயிற்சி வகுப்பு – பள்ளி மாணவர்களின் வருகை குறைவு!!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இலவச பயிற்சி ஆன்லைன் மூலமாக நவம்பர் 9 ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் சரியாக கலந்து கொள்ளாமல் உள்ளதாக ஆசிரியர் வட்டாரங்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நீட் தேர்வு பயிற்சி:
தமிழக அரசு சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு திட்டம் காரணமாக பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மருத்துவ படிப்புகளுக்கான நீட் பயிற்சி ஆன்லைன் மூலமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்காக இ-பாக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் ஆன்லைன் மூலமாக பயிற்சி வகுப்புகள் கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன.
அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில் காலிப்பணியிடங்கள் – பிப்ரவரி 25 நேர்முகத் தேர்வு!!
பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு 4 மாதங்கள் ஆன நிலையில் மாணவர்களின் வருகை விகிதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் இந்த பயிற்சியில் சேர 28 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் 3500 பேர் மட்டுமே வகுப்பில் கலந்து கொள்கின்றனர் அவர்களை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள கட்டாயப்படுத்த கூடாது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
எனவே அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் 7.5% இடஒதுக்கீடுக்கான அறிவிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி 2021-22 கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வின் முதந்தைய வாரம் வரை நடைபெறும் மேலும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டு நடத்தப்படும் நீட் தேர்வு வருடத்தில் 2 ஆண்டுகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர். எனவே மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்