மீண்டும் தீவிரமடையும் கொரோனா பரவல் – முழு ஊரடங்கு அமல்! அரசு அதிரடி உத்தரவு!

0
மீண்டும் தீவிரமடையும் கொரோனா பரவல் - முழு ஊரடங்கு அமல்! அரசு அதிரடி உத்தரவு!
மீண்டும் தீவிரமடையும் கொரோனா பரவல் - முழு ஊரடங்கு அமல்! அரசு அதிரடி உத்தரவு!
மீண்டும் தீவிரமடையும் கொரோனா பரவல் – முழு ஊரடங்கு அமல்! அரசு அதிரடி உத்தரவு!

கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் முடியாத பட்சத்தில் கொரோனாவின் புது உருவமாகிய ஓமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் அதிகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக சீனாவின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள பைஸ் நகரில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு அமல்:

உலகில் 90 நாடுகளில் கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. கொரோனா பரவலின் 2வது அலை குறைந்துள்ளதை தொடர்ந்து தற்போது தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இந்தியா, சீனா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட மேலும் பல நாடுகளில் ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இதுவரை கொரோனா தொற்றால் 57 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் அந்நாட்டு அரசு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் பிப்.16ம் தேதியன்று அரசு பொது விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

2022 ஆண்டின் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை சீனாவில் நடத்த சீன அரசாங்கம் முடிவு செய்தது. தற்போது உள்ள சூழலில் போட்டிகள் நடக்குமா என்று அனைத்து தரப்பிலும் கேள்வி எழுந்துள்ளது. இதை தொடர்ந்து சீனாவில் உள்ள பைஸ் நகரில் கொரோனா மற்றும் அதிக பரவல் ஆற்றல் உடைய ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பைஸ் நகரில் இதுவரை 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு எனினும் கொரோனா நோய்த்தொற்றால் பேரழிவை கண்ட சீன அரசு நோய் பரவலை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக உள்ளது.

கடையை சீல் வைக்க காரணத்தை சொன்ன அலுவலர், தர்ணாவில் அமர்ந்த மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

பைஸ் நகரில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகம் உறுதி செய்யப்பட்டு வருவதால் அங்கு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக சாலைகளில் சிவப்பு விளக்கு மட்டும் எரியும் விதமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பைஸ் நகரில் போக்குவரத்து சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று அதிகம் பரவுவதால் பொதுமக்கள் யாரும் நகரத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று சீன அரசு அறிவுறுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!