தமிழகத்தில் கருப்பு பூஞ்சை கட்டுப்பாடு பணிக்குழு – அரசு உத்தரவு!!
தமிழகத்தில் தற்போது தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வரும் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்துவதற்கு மாநில அளவில் பணிக்குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கருப்பு பூஞ்சை:
இந்தியாவில் கொரோனா நோய் தொற்று மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கும் நிலையில் கருப்பு பூஞ்சை என்ற புதிய நோயால் மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோய் பாதிப்பானது கொரோனா பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளை அதிகளவு தாக்குவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இவ்வகை கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் பலர் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
தவிர கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நோய் பாதிப்பை குணப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் 200க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்துவது மற்றும் சிகிச்சை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அளவில் பணிக்குழு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? அமைச்சர் முக்கிய அறிவிப்பு!!
இது குறித்து தமிழக அரசின் குழுவில் உள்ள ENT வல்லுநர் மோகன் காமேஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ‘கொரோனா பாதிப்பானது உருமாறி கருப்பு பூஞ்சையாக மாறுகிறதா என்று கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அவற்றை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து ஒருவருக்கு மூக்கடைப்பு, கண் மற்றும் முகத்தில் வலி இருந்தால், ENT சிகிச்சை நிபுணரை அணுகும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என கூறியுள்ளார்.