தமிழகத்தில் தேவேந்திரகுல வேளாளர் பெயரில் சாதி சான்றிதழ் – அரசு உத்தரவு!!
தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் புதிய அரசு அமைந்த பின்பு பல்வேறு கட்ட அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், தற்போது தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப்பெயரில் சாதி சான்றிதழை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தேவேந்திரகுல வேளாளர்:
தமிழகத்தின் புதிய முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்ற பின்னர் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி உள்ளார். ஆவின் பால் விலை குறைப்பு, நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4000 கொரோனா நிவாரணம் போன்றவை மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் அரசு துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
TN Job “FB Group” Join Now
தமிழகத்தில் தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்கப்படும் பட்டியல் சமூகத்தின் பள்ளர், குடும்பன், தேவேந்திர குலத்தான், காலாடி, கடையன், பண்ணாடி, வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகளை ஒன்றாக இணைக்கப்பட்ட ஓர் சமூகம் ஆகும்,இவர்கள் பட்டியல் சமூத்தவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் இடஒதுக்கீடு போன்ற பலவற்றினை பெற்று வரும் நிலையில் இந்த சமூகத்தினரை தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தது.
தமிழகத்தில் கடைகள் காலை 10 மணி வரை இயங்க அனுமதி? ஜூன் 7க்கு பின் தளர்வுகள் இருக்குமா!
இதனை தொடர்ந்து தற்போது இந்த சமூகத்தினருக்கு தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் சாதி சான்றிதழ் வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திருத்தம் குடியரசு தலைவரின் ஒப்புதல் பேரில் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.