நவ.10ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!
டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு பிறகு கோலாகலமாக கொண்டாடப்படும் சத் பூஜையை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதியன்று பொது விடுமுறை அறிவித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு
நாடு முழுவதும் கொரோனா பேரலைத் தொற்று ஓய்ந்திருக்க கூடிய சூழலில் கடந்த மாதங்களில் தான் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மீண்டுமாக திறக்கப்பட்டது. இதற்கிடையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் மாத துவக்கத்தில் இருந்து கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் என அனைத்திற்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மீண்டுமாக சத் பூஜையை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி பொது விடுமுறை அளித்து டெல்லி அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.9) இம்மாவட்டத்தில் உள்ளுர் விடுமுறை – கலெக்டர் அறிவிப்பு!!
இப்போது அளிக்கப்பட்டுள்ள விடுமுறை தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ‘சத் பூஜை டெல்லி மக்களுக்கு ஒரு முக்கியமான பண்டிகையாகும். இந்த பூஜையை முன்னிட்டு நவம்பர் 10 அன்று பொது விடுமுறை தினமாக அறிவிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் யமுனை நதிக்கரையைத் தவிர மற்ற நகரில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் சத் பூஜை கொண்டாட அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.
பாரதி கண்ணம்மா’ சீரியல் ரோஷினி யார் தெரியுமா? ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்த Biography!
தவிர கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது இடங்களில் சத் பூஜை கொண்டாடுவதை தடை செய்து DDMA செப்டம்பர் 30 அன்று உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. இந்த சத் பூஜை பீகார் மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மக்கள் தீபாவளிக்கு பிறகு கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பூஜையாகும். இந்த பூஜை மூன்று நாட்கள் வரை மேற்கொள்ளப்படும் விரிவான சடங்குகளை உள்ளடக்கியது கூடுதல் தகவல்.