தமிழகத்தில் ஆகஸ்ட் 1ல் அரசு அலுவலகங்கள், பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – இதற்காக தான்!

0
தமிழகத்தில் ஆகஸ்ட் 1ல் அரசு அலுவலகங்கள், பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை - இதற்காக தான்!
தமிழகத்தில் ஆகஸ்ட் 1ல் அரசு அலுவலகங்கள், பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை - இதற்காக தான்!
தமிழகத்தில் ஆகஸ்ட் 1ல் அரசு அலுவலகங்கள், பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – இதற்காக தான்!

மேல்மருவத்தூர் பகுதியில் ஒவ்வொரு வருடமும் ஆதிபராசக்தி ஆலயத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் ஆடிப்பூர திருவிழா வருகிற ஆகஸ்ட் 1 ந் தேதி நடைபெற இருப்பதால் அந்த சிறந்த நாளில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதை குறித்து மாவட்ட ஆட்சியர் பேசியுள்ளார்.

உள்ளூர் விடுமுறை:

உலகை ஆளும் அம்பிகை அவதரித்த தினமாக கொண்டாடப்படும் ஆடிப்பூர திருவிழா ஆடி மாதம் பூரண நட்சத்திரத்தில் அனைத்து அம்மன்களையும் வழிபடும் ஒரு சிறந்த விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள் என்ற உறுதி நம்பிக்கையை கொள்ளும் ஏராளமான பக்தர்கள் கூடி கொண்டாடும் விழாவாக அநேகரால் பேசப்படும் ஒன்றாக உள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 5 நாட்களுக்கான சிற்றுண்டி மெனு – பட்டியல் இதோ!

இவ்வாறு சிறப்பு மிகுந்த இவ்விழா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் ஆண்டுதோறும் 3 நாட்கள் நடைபெறும். முதல் நாளின் அதிகாலையில் கருவறையில் இருக்கும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். மாலையில் யாக சாலை பூஜை, விளக்குப் பூஜை, வேள்வி பூஜை என பல வழிபாட்டு பூஜைகள் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர்களால் தொடங்கப்படும். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் பல வழிபாடுகளும், அம்மனுக்கு புது புது பூஜைகளும் பல ஆயிரம் பக்தர்களுக்கு முன்னிலையில் சிறப்பாக நடைபெறும்.

Exams Daily Mobile App Download

மேலும், பீடத்தின் எதிரே உள்ள மைதானத்தில் பக்தர்கள் கொண்டு வந்த கஞ்சி அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதமாகவும் வழங்கப்படும். இந்த ஆடிப்பூர திருவிழா கடந்த இரண்டு வருட கால கட்டத்துக்கு பிறகு இந்த ஆண்டு எவ்வித கொரோனா கட்டுப்பாடுகளும் இன்றி மீண்டும் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற இருப்பதால் அந்த நாளுக்காக மக்கள் அதிக ஆர்வத்துடன் காத்து கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் கூறியதாவது : சிறப்பம்சம் மிகுந்த ஆடிப்பூர திருவிழா நடைபெறும் (ஆகஸ்ட் 1- திங்கட்கிழமை) அந்நாளில் உள்ளுா் விடுமுறை எனவும், ஆகஸ்ட் 13ஆம் தேதி பணி நாளாக ஈடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
உள்ளூர் விடுமுறை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!