தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை – முதல்வர் உத்தரவு!
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் 4 மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று யாரும் எதிர்பாராத விதமாக சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து 10 மணி நேரம் பெய்த கனமழையால் பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சென்னை எம்ஆர்சி நகரில் அதிகபட்சமாக 21 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னை துங்கம்பாக்கத்தில் 20 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மீனம்பாக்கத்தில் 15 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேரடியாக சென்று பார்வையிட்டார். மழை நீர் தேங்கிய இடங்களின் விவரம் மற்றும் மழைநீரை அகற்ற மேற்கொள்ளப்படும் நடவடிக்கை பற்றி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளில் மோட்டார் பம்பு மூலமாக தண்ணீரை அகற உத்தரவிட்டார். மேலும் நேற்று காலை முதல் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதனால் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் ஒரு நாள் மட்டும் விடுமுறை என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் படி அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு தொடங்கிய மழை மணல்மேடு, குத்தலாம், செம்பனார் கோவில், தரங்கம்பாடி போன்ற பகுதிகளில் தொடர்ந்து பெய்து வருகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்