தமிழக அரசின் ஷாக் அறிவிப்பு – அதிருப்தியில் அரசு ஊழியர்கள்!

0
தமிழக அரசின் ஷாக் அறிவிப்பு - அதிருப்தியில் அரசு ஊழியர்கள்!
தமிழக அரசின் ஷாக் அறிவிப்பு - அதிருப்தியில் அரசு ஊழியர்கள்!
தமிழக அரசின் ஷாக் அறிவிப்பு – அதிருப்தியில் அரசு ஊழியர்கள்!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் எனக் கூறி விட்டு, தற்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அந்த திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது. இதனால் தமிழக அரசு மீது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஷாக் அறிவிப்பு:

கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நாள் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் அனைவரும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டனர். இதனால் அரசு ஊழியர்களுக்கு அதுவரை கிடைத்து வந்த பணிக்கொடை, ஓய்வூதியம் என்று எதுவும் முழுமையாகக் கிடைக்காமல் போய்விட்டது. அதற்கு மாறாக, பணியின்போது அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகை மட்டும், அவர்கள் ஓய்வு பெற்றதும் திருப்பி வழங்கப்படும் என்றும் அன்றைய அதிமுக அரசு அறிவித்தது. இத்திட்டத்துக்கு அரசு ஊழியர்கள் தொடர்ந்து 19 ஆண்டுகளாக கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, திமுக தனது தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என உறுதி அளித்தது. இந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. திமுக, ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த ஓராண்டில் பல நல்ல திட்டங்களை தமிழக முதல்வர் அமல்படுத்தி உள்ளார். இருப்பினும் இதுவரை பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

வருவாய் துறையில் கிராம உதவியாளர் பணி வாய்ப்பு – மே 10 விண்ணப்பிக்க இறுதி நாள்..!

ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெறும் நாளில், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தச் சாத்தியமே இல்லை என்று சட்டப்பேரவையிலேயே நிதி அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருப்பது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் நாம் தமிழர் கட்சி, பாட்டாளி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் திருவாரூரில் இது தொடர்பாக பேசிய தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!