பாஸ்போர்ட் உடன் கொரோனா தடுப்பூசி சான்று இணைப்பு – தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் அந்த சான்றிதழில் பாஸ்போர்ட் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி சான்று:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் பணியாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசிகள் மக்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் 45 வயதுக்கு மேற்பட்டோர்க்கு மட்டும் செலுத்தப்பட்டது. பிறகு மத்திய அரசின் அனுமதி பெற்று மாநிலம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்துகிறது. தடுப்பூசி செலுத்துவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 51,667 பேருக்கு கொரோனா தொற்று – 1,329 பேர் பலி!
மேலும் மத்திய அரசின் கோவின் இணையதளம் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகள் நம்மை நோயிலிருந்து பாதுகாக்கிறது எனவும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது என மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தமிழக அரசு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழில் பாஸ்போர்ட் எண்ணை இணைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதை இணையம் மூலம் செய்யும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளது.
செப்.1 முதல் கல்லூரி வகுப்புகள் தொடக்கம் – ஏஐசிடிஇ திருத்தப்பட்ட அட்டவணை!
- முதலில் selfregistration.cowin.gov.in என்ற இனைய பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் உங்கள் செல்போன் எண்ணை பதிவிட்டு ஓடிபி எண்னை பெறவே வேண்டும்.
- பிறகு புதிய முகப்பு திரை உருவாகும் அதன் வலது பக்கத்தில் Raise an Issue என்பதை கிளிக் செய்யவும்.
- Add Passport Details என்பதில் உங்களது பாஸ்போர்ட் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.