தனியார் ஊழியர்களுக்கான தமிழக அரசின் புதிய திட்டம் – அதிரடி உத்தரவு!
தனியார் நிறுவனங்களுக்கு செக் வைத்து தமிழக அரசு பிறப்பித்துள்ள பரபரப்பு உத்தரவு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்று உள்ளது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
தனியார் ஊழியர்கள்:
இந்தியாவை பொறுத்த வகையில் பழைய ஓய்வூதியத் திட்டம் பற்றிய சர்ச்சை சமீப காலங்களில் மீண்டும் வரத் தொடங்கியுள்ளது. சில மாநிலங்கள் இத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியதே இதற்குக் காரணமாகும். ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேச அரசுகளைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் அரசும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் தமிழகத்தில் திமுக தங்களது தேர்தல் வாக்கு உறுதிகளில் ஒன்றாக இதுவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே அரசு ஊழியர்கள் சார்பில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அந்த கோரிக்கை என்னவென்றால், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வர வேண்டும் என்பது ஆகும்.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் தற்போது சிவகங்கை மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ராஜ்குமார் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அது என்னவென்றால், குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் படி தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி கணக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை தமிழக அரசு பல்வேறு தொழில்களுக்கு நிர்ணயித்து இருக்கும் அடிப்படை ஊதியத்துடன் வழங்கிட வேண்டும். மேலும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஏப்ரல் 2022 மாதம் முதல் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
தமிழக நகைக்கடன் தள்ளுபடி பெற இருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,507 மற்றும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ரூ.6,708 என மொத்தம் ரூ.10,205 வழங்க வேண்டும் என்றும், ஓட்டல் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் பணியாற்றும் சப்ளையர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.6,127 மற்றும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ரூ.6,708 என மொத்தம் ரூ.12,835 வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளனர்