தமிழக அரசு இலவச பேருந்துகளில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, திமுக ஆட்சி அனைத்து துறைகளிலும் பல்வேறு நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் பெண்களுக்காக அமல்படுத்தப்பட்ட” நகர பேருந்துகளில் இலவச பயண திட்டம்” பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
முக்கிய தகவல்:
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், திமுக கட்சி சார்பில் பல முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. மேலும் சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று, தமிழக முதல்வராக கடந்த ஆண்டு மே 07 பதவியேற்ற மு.க.ஸ்டாலின், 5 முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டார். அந்த உத்தரவில், தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பினைச் செயலாக்கும் வகையில், தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்ய முதல்வர் ஆணை பிறப்பித்தார்.
Exams Daily Mobile App Download
இதன் மூலம், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையான 1,200 கோடி ரூபாயை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் என்கிற திட்டம் நாடு தழுவிய நிபுணர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது, இது பெண்களின் பயணங்களை அதிகரிப்பது மட்டுமல்லாமல் பெண்களின் வாழ்க்கையை மாற்றவும், மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தவும் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு – அதிகரிக்கும் அரிசி கடத்தல்!
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், பெண்களுக்கு அவர்களின் உயர் கல்வித் தேவைகளை எளிதாக்குவதற்கும் பொருளாதார ரீதியாக பங்களிப்பதற்கும் பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான பயணங்கள் வழங்கப்படும், இது அவர்களின் சமூக-பொருளாதார நிலை மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் உள்ளது. இந்நிலையில் இந்த திட்டம் மூலம் தமிழ்நாட்டில் இதுவரை 106.34 கோடி முறை பெண்கள் இலவச பேருந்து பயணம் செய்துள்ளனர் என தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட போக்குவரத்து துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரியவந்துள்ளது. மேலும் அரசு பேருந்துகளில் கேமரா பொருத்தி மத்திய கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கும் பணி விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.