தமிழக அரசின் இ-சேவை முடக்கம் – சர்வர் பிரச்சனை!
தமிழகத்தில் அனைத்து அரசு சார்ந்த செயல்பாடுகளுக்கும் உதவும் இ-சேவை மையமானது மக்களுக்கு தக்க உதவிகரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது சர்வர் பிரச்சனை காரணமாக இ-சேவை மையங்களில் சேவை முடங்கியுள்ளது.
இ-சேவை:
தமிழக அரசின் பிரதான சேவைகள் அனைத்தும் இ-சேவை மையங்களில் வழங்கப்படுகின்றன. அதன்படி ஆதார் அட்டையில் திருத்தம், வருமான சான்று, முதல் பட்டதாரி சான்று, ஜாதி சான்று போன்ற பல சான்றுகளை மக்கள் எளிய வகையில் பெறுவதற்கு இ-சேவை மையம் தக்க உதவிகரமாக இருந்து வருகிறது. ஆனால் இ-சேவை மையங்களில் தொடர்ந்து சர்வர் பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்களுக்கு அளிக்கப்படும் சேவைகளில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பணிக்கு வருவதில் விலக்கு!
தற்போது மீண்டும் சர்வர் பிரச்சனை காரணமாக தமிழகத்தில் இ-சேவை மையங்களில் சேவைகள் முடங்கியுள்ளன. இது தொடர்பாக இ-சேவை மைய ஊழியர்கள் கூறியதாவது, மூன்று நாட்களாக பிரதான சர்வரின் செயல் திறன் குறைவாக உள்ளது. இதனால் இ-சேவை மையங்களுக்கு வரும் மக்களுக்கு உடனடி சேவைகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நடப்பு மாதத்தில் முதல் பட்டதாரி சான்று, சாதி சான்று என மாணவர்களுக்கான தேவைகள் அதிகமாக இருக்கும்.
TN Job “FB Group” Join Now
மேலும் தற்போதைய காலத்தில் மக்கள் அதிகமானோர் இ-சேவை மையத்தை நாடி வருகின்றனர். அதே நேரத்தில் தனியார் இ-சேவை மையங்களிலும் இது போன்ற சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. அவர்களும் சேவைக்காக இணைய பக்கத்தை பயன்படுத்தும் போது சர்வர் திறன் குறைகிறது. இந்த பிரச்சனை கடந்த மூன்று ஆண்டுகளாக நீட்டித்து வருகிறது. சர்வரின் செயல்திறன் குறைவாக உள்ளதால் தமிழகத்தில் தற்போது இ-சேவை மையங்களில் சேவைகள் முடங்கியுள்ளது. எனவே இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.