தமிழக அரசின் இ-பதிவு இணையம் மீண்டும் துவக்கம் – பொதுமக்கள் நிம்மதி!
தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை முதல் இ – பதிவு இணையதளம் முடங்கி இருந்தது. தற்போது இ – பதிவு தளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இ – பதிவு இணையத்தளம்:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு பரவல் கடந்த மே மாதத்தில் உச்சத்தை அடைந்தது. தமிழக அரசு நோய் தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியது. அப்போது மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு மட்டுமே இ – பாஸ் முறையை அரசு அறிவித்தது. மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு இ – பதிவு முறையே போதுமானதாக அறிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
பொதுமக்கள் இந்த அறிவிப்பை தவறாக பயன்படுத்த ஆரம்பித்தனர். அதிக அளவில் வெளி இடங்களில் சுற்ற ஆரம்பித்தனர். இதனால் நோய் பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் அரசு மே 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கை அறிவித்தது. இ – பதிவிற்கும் கட்டுப்பாடுகளை விதித்தது. இந்நிலையில் இன்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் பல லட்சக்கணக்கான சுய தொழில் செய்பவர்கள் இ – பதிவு தளத்தை அணுகினர்.
இந்தியாவில் ஒன்பிளஸ் CE 5G ஸ்மார்ட் போன் – ஜூன் 10 முதல் அறிமுகம்!
இதனால் இ – பதிவு இணையத்தளம் இன்று காலை முதல் முடங்கியுள்ளது. இணையத்தளம் இன்று மாலைக்குள் சரி செய்யப்பட்டு மீண்டும் சேவை தொடங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்தார். இந்நிலையில், காலை முதல் முடங்கி இருந்த இ – பதிவு இணையதளம் தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 60 லட்சம் பேர் இ- பதிவு செய்ய முயன்றதால் தளம் முடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.