தமிழக அரசின் 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் – ஆகஸ்ட் 13 ஆம் தேதி தாக்கல்!
தமிழக அரசு சட்டப்பேரவையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆகஸ்ட் 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் அவர்கள் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவை பட்ஜெட்:
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று பல மாதங்கள் ஆன நிலையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்று மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் இதற்கான ஆலோசனை கூட்டம் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நிதித் துறை அலுவலர்களுடன் முதலமைச்சர் தலைமையில் நேற்று நடைபெற்றது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை அறிக்கை!
கடந்த ஆட்சியின் போது பிப்ரவரி மாதம் தேர்தல் காரணமாக இடைக்கால நிதிநிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமுக அரசு முழு நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இதற்கு துறை ரீதியான ஆய்வு கூட்டங்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் மேற்கொண்டார்.
இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் வருகிற ஆகஸ்ட் 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார். மேலும் 2021 – 2022-ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை 10 மணிக்கு பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியிட உள்ளார்.
TN Job “FB Group” Join Now
கடந்த 10 ஆண்டு கால நிதி அறிக்கையில் 120 பக்க வெள்ளை அறிக்கையை அவர் வெளியிடுகிறார். அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் கல்வி படிப்புகளில் 7.5% ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பை தொடர்ந்து பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.