தமிழகத்தில் 10 ம் வகுப்பிற்கு மார்க் இல்லாமல் மதிப்பெண் சான்றிதழ் – அரசு திட்டம்!!
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்கள் குறிப்பிடாமல் தேர்ச்சி என்று மட்டுமே குறிப்பிட்டு வழங்கப்பட உள்ளதாக அரசு திட்டமிட்டு வருகிறது.
10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஓராண்டாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் வழியாக நடைபெற்று வருகிறது. கடந்த கல்வியாண்டில் கொரோனா பரவல் காரணமாக அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. மேலும் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அவர்களின் காலாண்டு அரையாண்டு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவி வருகிறது.
TN Job “FB Group” Join Now
அதனால் இப்போது வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. தமிழகத்தில் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளது அதனால் மாணவர்கள் சேர்க்கையை தொடங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறாத காரணத்தால் மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்களுக்கு பதிலாக தேர்ச்சி என்று குறிப்பிடப்பிட்டு சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் வரலாற்றில் இது முதன் முறையாகும்.
இன்று முதல் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் – புதிய வழிகாட்டுதல்கள் மாநில அரசு வெளியீடு!!
10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் 11ஆம் வகுப்பு சேர்க்கையின் போது அவர்களின் 9 ம வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் தேர்ச்சி என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகளில் சிக்கல் ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும் 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை நடத்த பட வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் தேர்ச்சி என்ற மதிப்பெண் சான்றிதழ் மாணவர்கள் அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்கியுள்ளது.