வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி – இலங்கை அரசு அறிவிப்பு!
இலங்கையில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிற நேரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள்:
இலங்கையில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் கடந்த மே மாதம் முதல் அதிகமாக பரவத் தொடங்கியது. இதனை தடுக்க அரசு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. மே மாதம் 21 ஆம் தேதி உச்சமாக ஒரே நாளில் 3,547 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் கட்டுப்பாடுகள் காரணமாக ஜூன் 5 ஆம் தேதி முதல் கொரோனா பரவல் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஜூலை 19 காலை 11 மணிக்கு +2 தேர்வு முடிவுகள் வெளியீடு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இதன் மூலமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2.81 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,661 ஆக உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் கொரோனா தடுப்பூசிகளில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது .
TN Job “FB Group” Join Now
மேலும் அவர்கள் இலங்கை வர பயணம் செய்யும் விமானத்தில் 72 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் அதனை காண்பிக்க வேண்டும். மேலும் முதல் நாள் பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதி செய்த பின்னர் அவர்கள் இலங்கையின் எந்தவொரு பகுதிக்கும் சுற்றுலா செல்லலாம். சுற்றுலா மேற்கொண்ட 7வது நாளில் இலங்கை சுகாதாரத்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை நிலையத்தில் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.