ஜூலை 31 வரை தளர்வுகளுடன் கூடிய இரவு ஊரடங்கு அமல் – கென்யா அரசு அறிவிப்பு!

0
ஜூலை 31 வரை தளர்வுகளுடன் கூடிய இரவு ஊரடங்கு அமல் - கென்யா அரசு அறிவிப்பு!
ஜூலை 31 வரை தளர்வுகளுடன் கூடிய இரவு ஊரடங்கு அமல் - கென்யா அரசு அறிவிப்பு!
ஜூலை 31 வரை தளர்வுகளுடன் கூடிய இரவு ஊரடங்கு அமல் – கென்யா அரசு அறிவிப்பு!

கொரோனா பேரலை பாதிப்புகள் தற்போது கென்யா நாட்டில் சற்று உயர்ந்து வருகிறது. அதனால் நாடு முழுவதும் வரும் ஜூலை 31 வரை இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளை சில தளர்வுகளுடன் அமல்படுத்துவதாக கென்யா அரசு அறிவித்துள்ளது.

முழு ஊரடங்கு

கென்யாவில் கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளாக இன்று (ஜூன் 30) முதல் ஜூலை 31 வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கென்யாவின் தலைநகர் நைரோபியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கென்யாவில் கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகளில் ஒரு பகுதியாக இரவு நேர ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதாகவும், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கவும், மதவழிபாட்டு தலங்களில் குறிப்பிட்ட அளவு மக்கள் கூடுவது குறித்தும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

கொரோனா 2வது அலையை சிறப்பாக கையாண்டதில் தமிழகம் முதலிடம்!

அந்த வகையில் கென்யாவின் மேற்கு பகுதிகளில் உள்ள 13 இடங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக காணப்படுவதால், அப்பகுதிகளில் ஜூலை 31 வரை இரவு நேர ஊரடங்கானது இரவு 7 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். தவிர கென்யாவின் மற்ற பகுதிகள் தோறும் இரவு நேர ஊரடங்கானது இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அந்த வகையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளின் படி கென்யாவில் அரசிய சார்ந்த கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 12ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தீவிரம் – மாநகராட்சி பள்ளிகள் மீது ஆர்வம்!

தொடர்ந்து கென்யாவிற்கு வரும் மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள் 96 மணி நேரத்திற்கு முன்னதாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, நெகட்டிவ் என்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தவிர திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் 100 பேருக்கு மேல் கலந்து கொள்ள அனுமதி இல்லை. அதே நேரத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட 10 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகளை செலுத்த அரசு நிர்ணயித்துள்ளது. தவிர ஆகஸ்ட் மாதம் முதல் ஒரு நாளைக்கு 150,000 பேருக்கு தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கென்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 719 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!