கூகுளுக்கு ரூ.1337 கோடி அபராதம் விதித்த இந்திய அரசு – காரணம் என்ன தெரியுமா?
ஆண்ட்ராய்டு தளம் மூலமாக கூகுள் நிறுவனம் நியாயமற்ற வர்த்தக நடைமுறையில் ஈடுபட்டதற்காக, கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1337 கோடி அபராதம் விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கூகுள் நிறுவனத்திற்கு அபராதம்:
மொபைல் பயன்பாடு விநியோக ஒப்பந்தம் (MADA) மற்றும் Anti Fragmentation Agreement – என்ற இரு ஒப்பந்தங்களை பயன்படுத்தி கூகுள் நியாயமற்ற வர்த்தக நடைமுறையில் ஈடுபடுவதாக புகார்கள் கடந்த 2019- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நுகர்வோர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது.
Follow our Instagram for more Latest Updates
இந்த விசாரணை தற்போது நிறைவு பெற்று, ‘தன் ஆதிக்க நிலையை தவறாகப் பயன்படுத்தியதற்காக’ தொழில்நுட்ப நிறுவனமான கூகுளுக்கு இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் ரூ.1,337.76 கோடி அபராதம் விதித்துள்ளது. CCI வழிகாட்டுதல்களின் கீழ், வரையறுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தனது நடத்தையை மாற்றியமைக்கவும் கூகுளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசின் தீபாவளி பரிசு – சூப்பர் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் கூகுள் நிறுவனத்தின் தொழில் நடைமுறைக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், நியாயமற்ற வணிக நடைமுறைகளைத் தவிர்க்குமாறு கூறியுள்ளது. அபராதத்திற்கு தேவையான நிதி விவரங்கள் மற்றும் ஆதார ஆவணங்களை வழங்க கூகுளுக்கு 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.