ஜூன் 1 முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம் – அரசு முக்கிய முடிவு!
கடந்த இரண்டு மாத காலமாக சீனாவின் ஷாங்காய் நகரத்தில் விதிக்கப்பட்டிருக்கும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜூன் 1 முதல் தளர்த்துவதற்கு அந்நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
ஊரடங்கு நீக்கம்
கொரோனா வைரஸ் உயிர்கொல்லி நோயின் பிறப்பிடமான சீனாவில், கடந்த 2 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு புதிய பாதிப்புகள் அதிகரித்து வந்தது. இதை கவனத்தில் கொண்ட சீன அரசாங்கம் பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. அந்த வகையில் கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக சீனாவின் நிதி மையமான ஷாங்காயில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. இந்த கட்டுப்பாடுகளால் ஷாங்காய் நகரத்தில் இப்போது கொரோனா புதிய பாதிப்புகள் சரிவடைந்து வருகிறது.
TCS, HCL, Infosys நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – அமலுக்கு வரும் நீண்ட கால WFH திட்டங்கள்!
இதனை கருத்தில் கொண்ட ஷாங்காய் நகர நிர்வாகம் அடிப்படை செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதாக தெரிவித்துள்ளது. அதன்படி ஷாங்காய் நகரத்தின் மாவட்டங்களை இணைக்கும் படகு உட்பட பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தை ஜூன் 1 முதல் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜூன் 1 நள்ளிரவு முதல் நகரின் இரண்டு மாத கால ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட இருக்கிறது. இந்த தளர்வுகளில் டாக்சிகள், தனியார் கார்கள் மீண்டும் சாலைகளுக்குச் செல்லவும், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு சுதந்திரமாக வெளியே செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இது தொடர்பாக ஷாங்காய் நகர அரசாங்கம் தனது அதிகாரப்பூர்வ WeChat கணக்கில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், ‘எங்கள் நகரத்தில் கொரோனா தொற்றுநோய் நிலைமை திறம்பட கட்டுப்படுத்தப்பட்டு, நிலைமை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது’ என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் மக்கள் இன்னும் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்றும், ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில், பெரும்பாலான பொது போக்குவரத்து நெட்வொர்க் மூடப்பட்டிருந்தாலும் மக்கள் முன் அனுமதி பெற்று வாகனத்தை ஓட்ட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.