தமிழகத்தில் 5ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழகத்தில் தேனி மாவட்ட வருவாய்த் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பற்றி விரிவாக பார்ப்போம். இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பெரும்பாலானோர் தங்களின் வேலைகளை இழந்தனர். அத்துடன் அரசு போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. அத்துடன் அரசுக்கு நிதி நெருக்கடி இருந்ததால் வேலைவாய்ப்பை உருவாக்கி தர முடியவில்லை. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. மேலும் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தீவிர நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
மத்திய அரசின் PM KISAN உதவித்தொகை பெறும் விவசாயிகள் கவனத்திற்கு – இதை செய்தால் ரூ.2000!
அந்த வகையில் தேனி மாவட்ட வருவாய்த்துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்தை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு 21 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் இதில் SC/SCA/ST உள்ளிட்ட பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், BC/MBC/DNC உள்ளிட்ட பிரிவினருக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 01.07.2021 அன்று நிலவரப்படி 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இதில் தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
Exams Daily Mobile App Download
அதன்படி இதில் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு ரூ 11,100 முதல் ரூ. 35,100 மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2022/04/2022042654.pdf என்ற லிங்கை கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன்பின் இதனை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், தேனி என்ற முகவரிக்கு வருகிற மே 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.