உள்ளூர் மக்களுக்கு மட்டுமே இனி அரசு பணிகள் – ஆளுநர் அறிவிப்பு!!
லடாக் யூனியன் பிரதேசத்தில் அரசு நிர்வாகத்தின் கீழ்நிலை பணிகள் அனைத்தும் உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று லடாக் ஆளுநர் அவர்கள் அறிவித்துள்ளார். தற்போது அதற்கான தகுதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
லடாக்:
கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரண்டாக பிரித்து உத்தரவிட்டது. இந்த பகுதிகளில் ஆளுநர் தலைமையிலான அரசு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து லடாக் யூனியன் பிரதேச பகுதிகளில் உள்ளூர் மக்களுக்கு அரசு வேலைவாய்ப்பினை ஏற்படுத்துவதற்கு பல திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த வகையில் லடாக் ஆளுநர் ஆர்.கே.மாத்தூர் அவர்கள் புதிய சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளார்.
ஜூன் 26 வரை இரவு நேர ஊரடங்கு அமல் – பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி!
இது தொடர்பாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது, லடாக் யூனியன் பிரதேசத்தில் அரசு நிர்வாகத்தில் உள்ள கீழ் நிலை பணிகள் அனைத்தும் உள்ளூர் மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. புதிய சட்டத்தின்படி அரசு பணிகளில் உதவியாளர்கள், தொழிலாளர்கள் போன்ற திறன் சார்ந்த பணிகள் அனைத்தும் உள்ளூர் மக்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
மேலும் இதற்கு கல்வித்தகுதி எதுவும் தேவையில்லை என்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்டவராக இருந்தால் போதும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நியமனம் நேரடியாக நடைபெறும் என்றும் பணியாளர்கள் தேர்வு செய்த பின்பு 2 ஆண்டுகள் கழித்து அவர்களின் திறன் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய சட்டம் அரசிதழில் அச்சாகும் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புதிய சட்டத்திற்கு பல்வேறு ஆதரவு மற்றும் எதிர்ப்புகள் இருந்து வருகிறது.