தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக அதிகரிப்பு – அரசாணை வெளியீடு!
தமிழக அரசுத்துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக நீட்டிக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. திமுக தலைமையிலான அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இது அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஓய்வு வயது அதிகரிப்பு:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இதனால் தொழில்துறைகள் மூடப்பட்டதால் அரசுக்கு வரிவசூல் குறைந்து வருவாய் சரிந்தது. எனவே செலவினங்களை குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அந்த வகையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது கடந்த அதிமுக ஆட்சியில் இருமுறை உயர்த்தப்பட்டது. இதனால் ஓய்வூதிய பலன்களில் அரசுக்கு மிகப்பெரும் தொகை மிச்சமானது. இது கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால் இளைஞர்களுக்கான அரசு வேலை கனவை இது பாதிக்கும் என பல தரப்பினரும் குற்றம் சாட்டினர்.
உலகின் 100 செல்வாக்கு மிகுந்தவர்கள் பிரதமர் மோடி, மம்தா – அமெரிக்க இதழ் பட்டியல் வெளியீடு!
இதனால் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை குறைக்க வேண்டும் என கோரப்பட்டது. இந்நிலையில் திமுக தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவியேற்றார். இதனையடுத்து பல்வேறு மாற்றங்கள் அரசுத்துறைகளில் நிகழ்ந்துள்ளன. அதில் ஒன்றாக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது மீண்டும் குறைக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் அதற்கு மாற்றாக அரசு ஊழியர்களின் ஓய்வு வயதினை 60 ஆக உயர்த்தி திருத்தப்பட்ட அரசாணை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இது அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், இளைஞர்கள் அதிருப்தியை தெரிவித்து உள்ளனர்.
செப் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – புதுச்சேரி அரசு உத்தரவு!
அந்த அரசாணையின் படி, அரசு ஊழியர்கள் 60 வயதை அடைந்த அடுத்த நாளே ஓய்வூதியதாரர்கள் ஆக கருதப்படுவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் இந்த முடிவிற்கு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகள் தங்களது கண்டனங்களை தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டம் நிலவி வரும் நிலையில் அரசின் இந்த முடிவினால் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு கடுமையாக பாதிக்கப்படும் என கூறியுள்ளனர்.