தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் நீக்கம் – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்து உள்ளதை அடுத்து கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்த நிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கி கொள்ளப்படுவதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அரசாணை வெளியீடு:
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவல் கோரத்தாண்டவம் ஆடியது. அதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு விதிமுறைகளை அமல்படுத்தியது. குறிப்பாக முழு ஊரடங்கு, மாஸ்க் அணியாமல் வெளியே வரக்கூடாது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பது உட்பட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு ஆன்லைன் முறையில் தான் வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு அனைத்து மட்டங்களிலும் வாரம்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இதன் பலனாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் இதுவரை தமிழகம் முழுவதும் அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் கொரோனா இல்லாத தமிழகம் என்ற நிலை ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வருவதால் கடந்த மார்ச் 31 ஆம் தேதியோடு கொரோனா நெறிமுறைகளும், கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. கொரோனா பரவல் விகிதத்தை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் இது சம்பந்தமான முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படியுடன் சம்பள உயர்வு – முழு விவரம் இதோ!
இதனை தொடர்ந்து மராட்டிய மாநிலம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள், தங்கள் மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளன. இந்த வகையில் தமிழ்நாட்டில் கொரோனா தொடர்பான அரசின் கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. .இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் தவணை தடுப்பூசியை 92 % பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 75 % பேரும் செலுத்திக் கொண்டு இருப்பதன் காரணமாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாஸ்க், கை கழுவுதல் உள்ளிட்ட அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.