தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு வைத்த செக் – கூட்டுறவு துறை முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு வைத்த செக் - கூட்டுறவு துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு வைத்த செக் - கூட்டுறவு துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு வைத்த செக் – கூட்டுறவு துறை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் தரம் இல்லாமல் இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்த காரணத்தால் தற்போது கூட்டுறவு துறையின் சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ரேஷன் கடை

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு சிறப்பான பல திட்டங்களை செய்து வருகிறது. அதனை தொடர்ந்து சென்ற வருடம் ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்ற கழகமும் நிறைய திட்டங்களை அமல் படுத்தி வருகிறது. அதிலும் முக்கியமாக குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1000 வழங்க இருப்பதாக அவர்களின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தனர். மேலும் இந்த திட்டத்தையும் விரைவில் செயல்படுத்த இருப்பதாக தமிழக அரசின் சார்பில் தெரிவித்து உள்ளனர். மேலும் கொரோனா காலத்தில் இரு தவணையாக பொது மக்களுக்கு ரூபாய் 2000 வழங்கி உள்ளனர்.

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து, தற்போது தமிழக கூட்டுறவு துறையின் சார்பில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், தமிழகத்தில் 2.19 கோடிக்கும் மேல் ரேஷன் கார்டுகள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. மேலும் தமிழக கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் கீழ் செயல்படும் 35,296 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இலவசமாக வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதை தவிர்க்க, தரமற்ற அரிசியை கடைகளுக்கு அனுப்பக் கூடாது என்றும், அதனை மீறி வந்தால் அதை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யக்கூடாது என்று கடைபணியாளர்களுக்கும் கூட்டுறவு துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மே 6ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – அரிய வாய்ப்பு தவறவிடாதீர்கள்!

மேலும், இவ்வாறு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் சென்னையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொருட்களை தலைமைச் செயலர் இறையன்பு 30ஆம் தேதி ஆய்வு செய்தார். அப்போது, உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் ராஜாராமனும் உடன் இருந்தார். இதைத் தொடர்ந்து, பொருட்களை தரமாக வழங்க வேண்டும் என்று உணவுத் துறை சார்பில் கூறப்பட்டது. தற்போது நியாயவிலைக் கடைகளில் தரமான பொருட்களை வழங்குவதை உறுதி செய்ய மாவட்டம் தோறும் 4 அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!