தமிழகத்தில் சுயதொழில் செய்பவர்களுக்கு இ-பதிவில் தனி வசதி – அரசு அறிமுகம்!

0
தமிழகத்தில் சுயதொழில் செய்பவர்களுக்கு இ-பதிவில் தனி வசதி - அரசு அறிமுகம்!
தமிழகத்தில் சுயதொழில் செய்பவர்களுக்கு இ-பதிவில் தனி வசதி - அரசு அறிமுகம்!
தமிழகத்தில் சுயதொழில் செய்பவர்களுக்கு இ-பதிவில் தனி வசதி – அரசு அறிமுகம்!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதில் சுயதொழில் செய்பவர்கள் ஜூன் 7 முதல் இ-பதிவு பெற்றுக்கொண்டு தங்கள் தொழிலை தொடங்கலாம் என அரசு அறிவித்துள்ளது. அதற்காக புதிய தனி வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

சுயதொழில் செய்பவர்களுக்கு இ-பதிவு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து கடைகளும் மூடப்பட்டது. அரசு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் முழு கவனம் செலுத்தியது. முக ஸ்டாலின் தலைமையில் அமைந்த புதிய அரசு பல்வேறு கொரோனா தடுப்பு குழுக்களை அமைத்து நோய் பரவலை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. முக ஸ்டாலின் அவர்கள் களத்திற்கே நேரடியாக சென்று பணிகளை பார்வையிடுகிறார். ஊரடங்கை சமாளிக்கும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் நிவாரண பொருட்களையும் வழங்கி வருகிறார்.

TN Job “FB  Group” Join Now

ssc

இந்த 14 நாட்கள் ஊரடங்கில் தொற்று பரவல் பெரிதாக குறையவில்லை. அதனால் மேலும் ஒருவார காலத்திற்கு தளர்வில்லா ஊரடங்காக நீட்டிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் விற்கப்படும் கடைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. தேவையின்றி வெளியில் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளது. தற்போது மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது, முதலில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு மட்டுமே இ-பதிவு வழங்கப்பட்டது.

PF கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயம் – EPFO அமைப்பு புதிய விதி!!

தற்போது சுயதொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலை தொடங்க இ-பதிவு பெற்றுக்கொள்ள வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. எலெக்ட்ரீஷியன், பிளம்பர், இயந்திரங்கள் பழுது பார்ப்பவர் போன்றோர் இ-பதிவுகளை பெற்றுக்கொண்டு பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இ-பதிவு இணையதளத்தில் சுயதொழில் என்ற பிரிவை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். பெயர், வண்டி எண் பார்க்கும் வேலை போன்றவைகளை பதிவு செய்து இ-பதிவு பெறலாம். சுய தொழிலுக்கான இ-பதிவை பெற ஒரே நேரத்தில் பலர் விண்ணப்பித்ததால் இ-பதிவு இணையதளம் முடங்கியது. தற்போது மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!