மாநிலம் முழுவதும் மீண்டுமாக முழு ஊரடங்கு அமல்? ஒமிக்ரான் எதிரொலி! வதந்திக்கு அரசு விளக்கம்!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று (டிச.6) முதல் ஜனவரி 1 வரை அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் மூடப்படும் என்று வெளியான செய்திக்கு தற்போது அரசு தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் மாறுபாடான ஒமிக்ரான் வைரஸ் தொடர்புடைய அச்சம் உருவாகி இருப்பதால் கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் நோய் தொற்று நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் இன்று (டிச. 6) முதல் ஜனவரி 1ம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்ற ஒரு செய்தி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மாநிலத்தில் கூடுதல் கொரோனா கட்டுப்பாடுகள், ஓமைக்ரான் வைரஸ் பரவல் எதிரொலி – முதல்வர் உத்தரவு!!
அதாவது, புதிய கொரோனா வைரஸ் மாறுபாடான ஒமிக்ரானை கருத்தில் கொண்டு ஜனவரி 1ம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் பெயரில் வெளியான ட்வீட்டில் இத்தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், இந்த தகவல் போலியானது என்று ஜார்க்கண்ட் மாநில முதல்வரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ‘மாண்புமிகு முதல்வர் ஹேமந்த் சோரனின் ட்விட்டர் கணக்கின் இந்த ஸ்கிரீன்ஷாட் ஒரு போலியான பதிவு.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – தேர்தல் ஆணையம் விளக்கம்!!
கொரோனா முழு ஊரடங்கு குறித்து மாநில அரசால் எந்தவித முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. இந்த தகவலை பரப்பின குற்றவாளிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கவும் ஜார்கண்ட் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒமிக்ரான் மாறுபாட்டைக் கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் மத இடங்கள் டிசம்பர் 6 முதல் ஜனவரி 1 வரை மூடப்படும் என்பது தவறான செய்தி’ என்று முதல்வரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.