கடை உரிமையாளர்களுக்கு அரசின் அறிவுறுத்தல் – மீறினால் ரூ.500 அபராதம்!

0
கடை உரிமையாளர்களுக்கு அரசின் அறிவுறுத்தல் - மீறினால் ரூ.500 அபராதம்!
கடை உரிமையாளர்களுக்கு அரசின் அறிவுறுத்தல் - மீறினால் ரூ.500 அபராதம்!
கடை உரிமையாளர்களுக்கு அரசின் அறிவுறுத்தல் – மீறினால் ரூ.500 அபராதம்!

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வரும் நிலையில், கடை உரிமையாளர்களுக்கு இது குறித்து சென்னை மாநகராட்சி முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

அறிவுறுத்தல்:

மக்காத குப்பைகள், மக்கும் குப்பைகளோடு சேர்த்து கொட்டப்படுவதால் அவற்றை சேகரித்து பிரித்து, தனித்தனியாக கிடங்குகளில் கொட்டுவது மிகவும் சிரமமான செயலாக இருப்பதாகவும், மக்கும் குப்பைகளோடு மக்காத குப்பைகளை சேர்க்கும் போது அவை மக்குவதற்கான காலமும் அதிகமாக இருக்கும் என்றும், இதனால் சுற்றுசூழல் அதிகமாக பாதிக்கப்படும் என்றும் அரசு பல காலமாக கூறி வருகிறது. சுற்றுசூழலை பாதுகாக்கும் விதமாகவும், மக்களுக்கு இதனை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையிலும் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

BSNL பயனர்களுகான புதிய ரீசார்ஜ் திட்டம் – Gaming voucher வசதி.. 2 லட்சம் வரை பரிசுத்தொகை!

Exams Daily Mobile App Download

இதற்காக இலவசமாக பல மாநகராட்சிகள் மக்களுக்கு தனித்தனியாக மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து வைப்பதற்காக இலவசமாக குப்பை தொட்டிகளை அளித்துள்ளது. இதேபோன்று கடைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சென்னை மாநகராட்சியில் மொத்தமாக உள்ள 83,010 கடைகளில் 33,069 கடைகளில் மக்கும், மக்காத குப்பைகள் பிரித்து வைக்கப்படுவதாகவும், மற்ற கடைகளிலும் இதேபோன்று குப்பைகளை பிரித்து தனித்தனியாக குப்பை தொட்டிகளில் அல்லது குப்பை சேகரிக்கும் வண்டிகளில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையும் மீறி சாலைகளில் குப்பைகளை கொட்டும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!