தமிழகத்தில் ஆடி திருவாதிரை நாளில் அரசு விடுமுறை – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் நாளை (07.08.2021) ஆடி திருவாதிரை நாளை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசு விடுமுறை:
தமிழகத்தில் ஆடி மாதம் என்பது மிக சிறப்பு பெற்றது. இந்த மாதம் முழுவதும் அனைத்து திருகோயில்களிலும் ஏராளமான சிறப்பு பூஜைகளும், சடங்குகளும் நடைபெறும். குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமை தோறும் அம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆடி மாதத்தில், ஆடி 18ம் பெருக்கு, ஆடி அமாவாசை, கிருத்திகை போன்றவை முக்கிய விசேஷ நாட்களாக கொண்டாடப்படுகிறது. அனைத்து ஆலயங்களிலும், ஆற்றங்கரை பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும்.
இந்தியா டூ அபுதாபி பயணிகள் விமான சேவை – ஆகஸ்ட் 10 முதல் தொடக்கம்!
ஆனால் இந்த வருடம் கொரோனா பரவலால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் 18ம் பெருக்கு நன்னாளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆடி மாதத்தின் மற்றொரு சிறப்பாக நாளை (07.08.2021) ஆடி திருவாதிரை ஆகும். இந்த நாள் கங்கை கொண்ட ராஜேந்திரசோழனின் பிறந்த தினமாகும்.
TN Job “FB Group” Join Now
இவரின் வரலாறு என்பது, கற்பனை சித்திரங்களால் கட்டப்பட்ட காகித கோட்டை அல்ல. தன் ஆளுமை திறனால், பல்லாயிரம் யானைகள் ஏற்றும் அளவிற்கு, மரக்கலங்கள் பல கட்டி, கடலை கடந்து, தன் வீரத்தால் உலகை புலிக் கொடியின் கீழ் ஆண்ட ஒப்பற்ற தமிழ் பேரரசன் என்று கூறி ராஜேந்திர சோழனை சிறப்பித்து அவர் பிறந்த ஆடி திருவாதிரை தினத்தை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்