அக்.6 & 9ம் தேதிகளில் பொது விடுமுறை – தமிழக அரசு ஆணை வெளியீடு!
தமிழகத்தில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கு பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
பொது விடுமுறை:
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த செப்டம்பர் 15ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் 22 ஆம் தேதி வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டு, 23 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.
மாதம் ரூ.500 முதலீட்டில் வாழ்நாள் முழுவதுக்குமான ஓய்வூதியம் – SBI புதிய திட்டம்!
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வேட்பாளர் மனு தாக்கல் செய்ய வரும்போது கடைபிடிக்க வேண்டிய கொரோனா கால வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, இறுதியாக 23,998 பதவிகளுக்கு மொத்தம் 79,433 பேர் போட்டியிடுகின்றனர். மேலும், நடக்க இருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் 9 மாவட்ட மக்கள் கவனத்திற்கு – உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை!
அதன்படி, உள்ளாட்சி தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களில் மற்றும், 28 மாவட்டங்களில் நடக்க இருக்கும் தற்செயல் தேர்தல் நடைபெறும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பொது விடுமுறை அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவின் போது பூத் சிலிப் இல்லாத வாக்காளர்கள் பொது தேர்தலில் அனுமதிப்பதை போல், 14 மாற்று ஆவணங்களில் ஒன்றை வைத்து வாக்களிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.