ஜூன் 13ம் தேதி (நாளை) அரசு விடுமுறை தினமாக அறிவிப்பு – பள்ளி, கல்லூரிகள் & அலுவலகங்கள் மூடல்!
ஸ்ரீலங்காவில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார சிக்கலை சமாளிப்பதற்காக நாளை விசேட அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு விடுமுறை:
ஸ்ரீலங்கா தற்போது மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த பொருளாதார வீழ்ச்சியால் பெட்ரோல், டீசல், உணவு பொருட்கள், எண்ணெய் என அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பல மடங்காக உயர்ந்துள்ளது. பொதுமக்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக ஸ்ரீலங்கா அரசின் மீது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் ஸ்ரீலங்காவில் நிலவும் போக்குவரத்து சிரமங்களை சமாளிக்கவும், மின்சார அல்லாத நேரங்களிலும் அலுவலகங்கள் நடத்துவதில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சமாளிப்பதற்காகவும் நாளை முழுவதும் ஸ்ரீலங்காவில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 5% அகவிலைப்படி (DA) உயர்வு? 7வது ஊதியக்குழு அறிக்கை!
ஸ்ரீலங்காவில் உள்ள அரசு அலுவலகங்கள், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைப்பு என அனைத்திற்குமே விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீலங்காவில் உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த தனியார் பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்திற்கும் ஜூன் 13ஆம் தேதியன்று நாளை விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் அத்தியாவசிய பணிகளை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை செய்வதற்கு இந்த விடுமுறை இடையூறாக இருக்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஸ்ரீலங்காவில் ஜூன் 14ஆம் தேதி பொசன் பௌர்ணமி தினத்தின் காரணமாக அரசாங்க விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது நாளையும் விசேட அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காவில் நிலவி வரும் பொருளாதார சிக்கல்களை சமாளிப்பதற்காகவே இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சகத்தின் சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.