செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 10 வரை அரசு விடுமுறை – காரணம் இது தான்! மேற்கு வங்க அரசு அறிவிப்பு!
மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜையை முன்னிட்டு செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரைக்கும் 10 நாட்கள் அரசு விடுமுறை என முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், பூஜைக்கான ஏற்பாடுகள் மேற்குவங்கத்தில் நடைபெற்று வருகிறது.
அரசு விடுமுறை:
மேற்கு வங்க மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் துர்கா பூஜை மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் கொல்கத்தா மற்றும் நகரத்தின் பல பகுதிகளில் பந்தல்கள் அமைக்கப்பட்டு துர்க்கையம்மன் சிலைக்கு பல வழிபாடுகள் செய்யப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளுமே கொரோனா பரவலின் காரணமாக மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை நடைபெறவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு நடைபெற இருப்பதால் துர்கா பூஜையை மிக சிறப்பாக கொண்டாட வேண்டும் என அரசு முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் துர்கா பூஜைக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள், நடவடிக்கைகள் குறித்து குழு உறுப்பினர்களுடன் கலந்தோசிக்கப்பட்டது. அதாவது, துர்கா பூஜை செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரைக்கும் நடைபெற இருக்கிறது. மேலும், இந்த 10 நாட்களும் அரசு விடுமுறை என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தமிழக போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – அமைச்சர் தகவல்!
Exams Daily Mobile App Download
கடந்த ஆண்டு துர்கா பூஜைக்காக கமிட்டிகளுக்கு ₹50,000 நிதியுதவி வழங்கப்பட்டது. இந்தாண்டு துர்கா பூஜை ஏற்பாட்டுக் குழுக்களுக்கான மானியம் ரூ.60,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கு வங்கத்தில் நடைபெறும் இந்த துர்கா பூஜை மனிதகுலத்தின் அருவமான கலாச்சார பாரம்பரியம் என்கிற பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், இந்த பட்டியலில் சேர்த்ததற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் செப்டம்பர் 1 ஆம் தேதி கொல்கத்தாவில் பேரணி ஏற்பாடு செய்ய இருப்பதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்