தமிழக அரசு ஊழியர்களுக்கான தற்செயல் விடுப்பு – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்பு தற்செயல் விடுப்பு
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் கொரோனா கால கட்டத்தில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டது. இதில் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு ஏதேனும் கொரோனா தொற்றிற்கான அறிகுறிகள் தென்பட்டாலோ அல்லது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டாலோ அவர்களுக்கு 7 முதல் 14 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டது. அத்துடன் கொரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரியலாம் என்றும் அரசு அறிவித்திருந்தது.
தமிழகத்தில் நாளை (ஜூலை 11) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
இதனை தொடர்ந்து தற்போதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்துடன் தமிழகத்தில் ஒரு நாள் பாதிப்பு 2000 ஆயிரத்தை தாண்டி பதிவாகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து தற்போது அரசு ஊழியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு தொடர்பாக அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் சிகிச்சை பெற்ற நாட்கள் தொடர்பாக மருத்துவரிடம் சான்றிதழ் பெற்று இதனை சமர்ப்பித்து சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்து கொள்ளலாம்.
Exams Daily Mobile App Download
அத்துடன் ஒரு அரசு ஊழியருக்கு கொரோனா அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட நாட்களுக்கான மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்து சிறப்பு விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பில், தமிழகத்தில் அரசு ஊழியர்கள் வசிக்கும் பகுதியில் தொற்று அதிகம் பரவி வந்தாலும் அத்துடன் அப்பகுதி அரசால் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருப்பின் அதற்குரிய சான்றிதழை சமர்ப்பித்து சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.