தமிழகம் முழுவதும் இன்று மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – அரசின் வழிகாட்டுதல்கள்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பள்ளி, கல்லூரிகளும் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதை ஓட்டி தமிழக அரசு கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா 3ம் அலை தாக்குதல் காரணமாக கடந்த மாதம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மாணவர்களின் நலன் கருதி மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து தமிழக அரசு பிப்ரவரி 1ம் தேதியான இன்று முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்தோடு பள்ளிக்கு சென்றுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
மாணவர்கள் வருகையை எதிர்நோக்கும் வகையில் பள்ளிகள் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக சுகாதாரத்துறை அனைத்து பள்ளி, கல்லூரிகளும் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அரசின் வழிகாட்டுதல்களை அனைவரும் கட்டாயம் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூனியன் பட்ஜெட் 2022 – மாத சம்பளம் வாங்குபவர்களின் எதிர்பார்ப்பு என்னென்ன? ஒரு அலசல்!
வழிகாட்டுதல்கள்:
- ஆசிரியர்களுக்கும் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும். பள்ளிகளில் முகக்கவசம், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
- அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும், பணியாளர்களும் பள்ளி வளாகத்தின் உள்ளேயும், வெளியேயும் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும்.
- உடல்வெப்ப பரிசோதனை கருவிகள், கிருமி நாசினிகள், சோப்புகள், பல்ஸ் ஆக்ஸிமீட்டர்கள் போன்ற பொருட்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே அவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
- அனைத்து வேலை நாட்களிலும் பள்ளி நுழைவு வாயிலிலும், பள்ளி வளாகத்திலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க சமூக இடைவெளிக்கான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும்.
- பள்ளியில் மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே சுற்றி திரிய அனுமதிக்கக் கூடாது. நுழைவாயில் மற்றும் பள்ளிக்குள் வரிசையில் நிற்கும் போது குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்.
- இறைவணக்க கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். நீச்சல் குளங்களை மூட வேண்டும். உடற்கல்வி மற்றும் விளையாட்டுகளுக்கான பாட வேளைகள் அனுமதிக்கப்படாது. கழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்யப்பட வேண்டும்.
- வெவ்வேறு வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வருதல், வெளியேறுதல் ஆகியவற்றுக்கு வெவ்வேறு நேரத்தை நிர்ணயிக்கலாம். வருவதற்கும், செல்வதற்கும் பள்ளிகளில் வெவ்வேறு பாதைகளை பயன்படுத்த வேண்டும்.
- தமிழகம் முழுவதும் கல்லூரிகளும் இன்று திறக்கப்படுகின்றன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் இன்று முதல் தொடங்குகின்றனர்.