மதுரை தமுக்கத்தில் அரசு பொருட்காட்சி – மே 14 முதல் 45 நாட்களுக்கு நடத்த முடிவு!
மதுரையில் சித்திரைத் திருவிழாவின் போது தமுக்கம் மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் இதற்கான பணிகள் முடிவடைய உள்ள நிலையில் வருகிற மே 14ம் தேதி அன்று பொருட்காட்சி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பார்ப்போம்.
பொருட்காட்சி
மதுரை சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. அத்துடன் இத்திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு வருகை தரும் லட்சக்கணக்கான மக்கள் பொழுதுபோக்குக்காகவும், அரசு நலத்திட்டங்களை தெரிந்து கொள்வதற்காகவும் தமுக்கம் மைதானத்தில் ஆண்டுதோறும் அரசு சார்பாக பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கமாகும். இந்த நிலையில் தமுக்கம் மைதானத்தில் தற்போது மாநகராட்சி சார்பில் ரூ.45.5 கோடியில் வர்த்தக மையம் அமைக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
இதை கட்டும் பணிகள் நிறைவடையாததால் இந்த ஆண்டு சித்திரைப் பொருட்காட்சியை மாட்டுத்தாவணி அருகே உள்ள மாநகராட்சி இடத்தில் நடத்த உள்ளதாக அரசு அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் கோவிலுக்கு வருகை புரிபவர்கள் மாட்டுத்தாவணிக்கு செல்ல மாட்டார்கள். மேலும் இதனால் விபத்துகள், கூட்ட நெரிசல் உள்ளிட்டவை ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் பொருட்காட்சியை தமுக்கம் மைதானத்திலேயே நடத்த வேண்டும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
NIELIT தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை – ரூ.1 லட்சத்துக்கு மேல் ஊதியம்..!
அத்துடன் தமுக்கத்தில் வர்த்தக மைய கட்டுமான இடம் தவிர மீதமுள்ள இடத்தில் அரசு பொருட்காட்சி நடத்த வேண்டும் என்று அரசுக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை அரசு ஏற்று தமுக்கம் மைதானத்திலேயே பொருட்காட்சியை நடத்த முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வருகிற மே14ம் தேதி முதல் 45 நாட்களுக்கு அரசு சித்திரை பொருட்காட்சி நடைபெற உள்ளது. இதில் அரசின் துறை சார்ந்த சாதனை அரங்குகள் பொழுதுபோக்கு உள்ளிட்டவை இடம்பெற உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.