ஜூலை 5 முதல் அரசுத்தேர்வு பயிற்சி வகுப்புகள் துவக்கம் – நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு!
மஹாராஷ்டிரா மாநிலம் புனே பெருநகரில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடருகின்றன போதிலும் ஜூலை 5 முதல் போட்டித்தேர்வுகள், உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டுகளுக்கான பயிற்சி வகுப்புகளை துவங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
பயிற்சி வகுப்புகள்
கொரோனா 2 ஆம் அலை காரணமாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புனே மாநகரில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்து சில தளர்வுகளை அளித்து புனே முனிசிபல் கார்ப்பரேஷன் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை துவங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தவிர 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் கலந்து கொள்ளும் உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கல் – முதல்வர் உத்தரவு!
இது குறித்து நகராட்சி ஆணையர் விக்ரம் குமார் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘புனே முழுவதும் வெளிப்புற விளையாட்டு மற்றும் உட்புற விளையாட்டுகள் வாரத்தின் அனைத்து நாட்களிலும் மாலை 4 மணி வரை அனுமதிக்கப்படும். ஆனால் உட்புற விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் முழுமையான தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 4 மணி வரை, 50 சதவீத மாணவர்களுடன் செயல்படலாம்.
TN Job “FB Group” Join Now
ஆனால் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்களும், ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸையாவது எடுத்திருக்க வேண்டும். இந்த புதிய உத்தரவானது ஜூலை 5 முதல், குடிமை வரம்புகள், புனே கன்டோன்மென்ட் போர்டு மற்றும் கிர்கி கன்டோன்மென்ட் போர்டு பகுதிகளில் அமல்படுத்தப்படும். இது தவிர புனே மாநகரம் முழுவதும் தினமும் மாலை 5 மணிக்குப் பிறகு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். அத்தியாவசிய வகை கடைகள் அனைத்தும் தினமும் மாலை 4 மணி வரை திறந்திருக்கும். ஆனால் அத்தியாவசியமற்ற வகை கடைகள் வார இறுதிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.