தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழகத்தில் உள்ள வேலூரில் இந்து அறநிலைத்துறை சார்பில் இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் அலுவலகத்தில் 6 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு தமிழகத்தில் உள்ள 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளனர்.
அரசு வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் குறைத்து வந்த நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் குரூப் 2 தேர்வுகளுக்கான நாட்களை அறிவித்து இருந்தது. மேலும் கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில் தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப் பட்டு முழுமூச்சில் செயல்பட்டு வருகிறது. இந்த ஒரு தொடர்ச்சியாக தமிழ் நாட்டில் உள்ள படித்த பட்டதாரிகள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த TNPSC Group 2 தேர்வு அறிவிப்பு சென்ற மாதம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதனை தொடர்ந்து குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியாகி உள்ளது. மேலும் அடுத்தாக, ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்புகளும் வெளியாகி உள்ளது.
TNPSC தேர்வர்களுக்கு ஷாக் அறிவிப்பு – ஆங்கிலத்தில் மட்டும் தேர்வு? தமிழில் நடத்த கோரிக்கை!
இந்த நிலையில் தற்போது இந்து அறநிலையத்துறை சார்பில் வேலைவாய்ப்பு ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த அறிவிப்பு என்னவென்றால், வேலூர் மாவட்டத்தில் உள்ள இந்து அறநிலைய துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்துக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. முதலில் அலுவலக உதவியாளர் பணிக்கு சம்பளமாக ரூ. 15,700 முதல் 50,000 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியிடம் வேலூர் உதவி ஆணையர் அலுவலகம் மற்றும் கல்வித் தகுதியாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
தேசிய பென்சன் திட்ட (NPS) கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – பேலன்ஸ் பார்ப்பது எப்படி? முழு விவரம்!
அடுத்தாக ஓட்டுநர் பணிக்கு காலியிடங்களின் எண்ணிக்கை 2 என்றும், பணியிடமாக வேலூர் இணை ஆணையர் அலுவலகம் மற்றும் வேலூர் உதவி ஆணையர் அலுவலகம் என்றும், கல்வித்தகுதியாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். அதனை தொடர்ந்து சம்பளமாக 19,500 முதல் 62,000 வரை தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வயதுத் தகுதியாக 01.07.2021 அன்று விண்ணப்பதாரர் 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இருப்பினும் BC/MBC/DNC பிரிவினர் 34 வயது வரையிலும், SC/ST பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்து உள்ளனர்.