அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் வேலை , PF உயர்வு – விரைவில் அமலுக்கு வரும் புதிய விதிகள்!
புதிய தொழிலாளர் நல கொள்கைகளில் எண்ணற்ற மாற்றங்கள் இடம்பெற உள்ளன என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தச் சட்டங்கள் அமலுக்கு வரும்போது , நாட்டில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களில் அதிக நன்மைகள் ஏற்படும் என தகவல்கள் கூறுகின்றன. இந்த தொழிலாளர் நலன் தொடர்பான விதிகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
புதிய விதிகள்:
மத்திய அரசு பல மாதங்கள் பரிசீலனை செய்த பிறகு தொழிலாளர் நலன் தொடர்பான 4 கொள்கைகளை வெளியிட்டுள்ளது. அதாவது, ஊழியர்களின் சம்பளம், அவர்கள் pf திட்டத்துக்கு வழங்கும் பங்களிப்பு, பணி நேரம் போன்றவற்றில் மாற்றம் நடைபெற இருக்கிறது. இதையடுத்து ஊழியர்களின் பணிச்சூழல், தொழிலாளர் நலன், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட உள்ளன. மேலும் உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், அருணாசலப் பிரதேசம், ஹரியாணா, ஜார்க்கண்ட், பஞ்சாப், மணிப்பூர், பீகார், ஹிமாசலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இந்த வரைவு கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
பணி நாட்கள்:
- புதிய விதிகள் அமலுக்கு வந்தால் தொழிலாளர்களுக்கு 5 நாட்களுக்குப் பதிலாக 4 வேலை நாட்கள் என்ற முறையை நிறுவனங்கள் அமல்படுத்த முடியும். அதாவது, 3 நாட்கள் வார விடுமுறை கிடைக்கும்.
- ஆனால், இதில் ஒரு நிபந்தனை உண்டு. வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை எடுக்கும் ஊழியர்கள் 8 மணி நேர பணிக்குப் பதிலாக 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.
- ஒவ்வொரு தொழில் நிறுவனத்திற்கும் இந்த விதிமுறை பொருந்தும். ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்கனவே அமலில் உள்ள விதிமுறைகளை பொருத்து இது மாறும்.
PF பங்களிப்பு மற்றும் டேக் ஹோம் சேலரி:
அதாவது, இந்த புதிய விதி மூலமாக பிஎஃப் திட்டத்துக்கு ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் அளிக்கும் பங்களிப்பு தொகை உயரும். இதனால், ஊழியர்களுக்கு கைகளில் கிடைக்கும் ஊதியம் குறைய வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம், ஓய்வுபெறும் போது கிடைக்கும் PF தொகை மிக அதிகமாக இருக்கும்.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் தகவல்!
ஆண்டு விடுப்புகள்:
ஊழியர் பணிக் காலத்தில் எடுக்கும் விடுப்புகள் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, ஓராண்டில் எஞ்சியிருக்கும் விடுப்பு நாட்களை அடுத்த பணி ஆண்டில் சேர்த்துக் கொள்வது, அதிக விடுப்பு பெறுவது போன்ற தளர்வுகள் செய்யப்பட உள்ளன.
சேவை துறையில் WORK FROM HOME கலாச்சாரத்தை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், ஓராண்டில் 180 நாட்கள் பணி செய்திருந்தாலே புதிய ஊழியர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்ற விதிமுறை மாற்றப்பட்டு, இனி அது 240 நாட்கள் என திருத்தம் செய்யப்பட உள்ளது.