அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டாம் – DEO சுற்றறிக்கை!
புதிய கல்வியாண்டு ஜூன் 14 முதல் தொடங்கப்பட்ட நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டாம் எனவும் பணியாளர்களை பள்ளிக்கு வர வற்புறுத்த வேண்டாம் என மாவட்ட கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. புதிய கல்வியாண்டு ஜூன் 14 முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் நடுநிலை முதல் மேல்நிலை வரை மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும் பணியும் நடைபெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தஞ்சாவூர் மாநிலத்தில் கொரோனா பரவல் குறையாத காரணத்தினால் கும்பகோணம் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி, மெட்ரிக் பள்ளிகளில் அரசு வழிகாட்டுகள் வரும் வரை, மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தொடக்க, மேல்நிலைப்பள்ளிகள் ஜூலை 1 முதல் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
மேலும் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் என வற்புறுத்த கூடாது எனவும் அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதல்வர்கள் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.