தமிழகத்தில் பொதுமக்களுக்காக அரசு பேருந்துகள் தயார் – ஏஐடியூசி அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு முடிந்ததும் அரசு எந்த நேரத்தில் அறிவித்தாலும் தயார் நிலையில் பேருந்துகளும், தொழிலாளர்களும் களப்பணியாற்றிட தயாராக உள்ளனர் என ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
பேருந்துகள் தயார் :
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்தியது. நோய் பரவலை தடுக்க அரசு மாநிலம் முழுவதும் கடந்த மாதம் 10 ம் தேதி முதல் முழு ஊரடங்கை அறிவித்தது. அரசு பேருத்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இடையில் மே 22, 23 ஆகிய தேதிகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு அனைத்து பகுதிகளிலும் பேருந்து இயக்கப்பட்டது . தற்போது தமிழகத்தில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு பணியாளர்களுக்கு மட்டும் மாவட்டம் தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
கொரோனா 3ம் அலை : குழந்தைகளுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் – ஆயுஷ் பாதுகாப்பு அமைச்சகம் வெளியீடு!!
பேருந்து சேவைகள் இல்லாத காரணத்தால் அரசு போக்குவரத்து கழகத்தில் தஞ்சாவூர் புறநகர், தஞ்சை நகர கிளைகள் 1, 2, திருவையாறு, பட்டுக்கோட்டை, கும்பகோணம் என்று சுமார் 10 பணிமனைகளில் புறநகர் பேருந்துகள் 300, நகர பேருந்துகள் 213 என மொத்தம் சுமார் 513 பேருந்துகளும், நாகப்பட்டினத்தில் 600 பேருந்துகள், திருச்சி, கரூர் கழகத்தில் சுமார் 1,200 பேருந்துகள், புதுக்கோட்டை, காரைக்குடி கழகம் என கும்பகோணம் மண்டலத்தில் சுமார் 3,200 பேருந்துகள் அனைத்தும் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
பணிமனை வளாகத்தின் உள்ளேயே தினமும் பேருந்துகளை இயக்குவது, பேட்டரி, டயர், கிரீஸ் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளுடன், பேருந்துகள் அனைத்தும் கிருமிநாசினி சுத்தம் செய்தும் பராமரிக்கப்பட்டு வருகின்றது. பேருந்துகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. கொரோனா கால ஊரடங்கு முடிந்தவுடன் அரசு எந்த நேரத்தில் அறிவித்தாலும்அரசு பேருந்துகளும், தொழிலாளர்களும் களப்பணியாற்றிட தயராக இருக்கின்றோம் என ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளனம் மாநில துணைத் தலைவர் துரை மதிவாணன் தெரிவித்துள்ளார்.