தமிழகத்தில் அரசு பேருந்துகள் தனியார் மயமாகுமா? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் அரசு பேருந்துகள் தனியாருக்கு விடுவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த அறிவிப்பு சாமானிய மக்களிடம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து துறை அறிவிப்பு
மக்களின் அத்தியாவசிய தேவைகளில் இன்றியமையாத ஒன்று போக்குவரத்து வசதியாகும். தமிழகத்தில் போக்குவரத்து துறை மக்களுக்கு சிறப்பான சேவைகளை செய்து வருகிறது. தற்போதைய தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்குவதாக அறிவித்திருந்தது. அதன்படி தமிழகமெங்கும் அரசு பேருந்துகளில் அந்தந்த மாவட்டங்களுக்குள் பெண்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம். மேலும் பண்டிகை காலங்களில் மக்களின் வசதிக்கேற்ப சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்து கூட்ட நெரிசலை தவிர்க்க வழி செய்கிறது.
TN Job “FB Group” Join Now
தமிழக போக்குவரத்து துறை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக போக்குவரத்தில் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அரசு பேருந்துகளில் உள்ள பார்சல் சேவைகள் மாத மற்றும் வாராந்திர வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அரசு பேருந்துகளை தனியாருக்கு விடப்போவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் அதனை குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி பணி – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் அரசு பேருந்துகளை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர். ராம்தாஸ் வலியுறுத்தியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்றும் கூறி உள்ளார். அதில் தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் மக்களுக்கு நிறைவான சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் பேருந்துகளை நவீன மயமாக்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசு பேருந்துகளை தனியார் மயமாக்குவது குறித்து எந்தொரு திட்டமும் இல்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.