தமிழகத்தில் அரசு பேருந்து டிக்கெட் கட்டணம் உயர்வு? அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்தில் அரசு பேருந்து டிக்கெட் கட்டணம் உயர்வு? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் அரசு பேருந்து டிக்கெட் கட்டணம் உயர்வு? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் அரசு பேருந்து டிக்கெட் கட்டணம் உயர்வு? அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் தற்போது 27 மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பேருந்து சேவைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்படுமா என்பது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் விளக்கமளித்துள்ளார்.

பேருந்து கட்டணம்:

தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான மாநில அரசு கொரோனா கால கட்டத்தில் மிக சிறப்பாக செயல்பட்டு பல கட்டுப்பாடுகளை விதித்து தற்போது தொற்றை கட்டுக்குள் கொண்டு வர வழிவகை செய்துள்ளது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் மாநில அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் தற்போது நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில் இந்த பட்ஜெட் தொடர் முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் முதல் DA உயர்வு – பொதுச்செயலாளர் தகவல்!

இதனை தொடர்ந்து தமிழகத்தில் பேருந்து டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்படுமா என்று தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது இது குறித்து தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் விளக்கமளித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, தமிழகத்தில் சுமார் ஒரு மாத காலத்திற்கு பின் 27 மாவட்டங்களில் பேருந்து சேவை இயங்கி வருகிறது. பேருந்து சேவை தொடங்கிய முதல் நாளிலே சுமார் 22 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – View Once அம்சம் அறிமுகம்!

மாவட்டங்களில் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தமிழக போக்குவரத்து துறை ரூ.31 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதற்கு மத்தியில் பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் தமிழகத்தில் பேருந்து டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று தெரிவித்தார். இந்த தகவல் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் – காணொளி வாயிலாக ஆலோசனை!

மேலும் தமிழக நகர பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்பவர்களுக்கு தனி கலர் டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து பேருந்துகளிலும் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் மற்றும் அதன் பொருள் எழுதும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். இலவச பயண நகர பேருந்துகளில் புதிய வண்ணம் பூசுவது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!