தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு 24 சதவீதமாக உயர்வு – ஆளுநர் ஒப்புதல்!

0
தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு 24 சதவீதமாக உயர்வு - ஆளுநர் ஒப்புதல்!
தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு 24 சதவீதமாக உயர்வு - ஆளுநர் ஒப்புதல்!
தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு 24 சதவீதமாக உயர்வு – ஆளுநர் ஒப்புதல்!

தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை 24 சதவீதமாக உயர்த்துவது குறித்த தீர்மானத்தை கர்நாடகா மாநில அரசு நிறைவேற்றியது. இதற்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இடஒதுக்கீடு:

SC, ST பிரிவினை சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் உயர்வு வழங்குவது குறித்த போராட்டமானது கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றது.

Follow our Instagram for more Latest Updates

தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாகவும் பழங்குடியின வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு 3 சதவீத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இது சம்மந்தப்பட்டு நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையிலான குழு கொடுத்த சிபாரிசை அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படும் என கர்நாடகா மாநில முதல்வர் தெரிவித்திருந்தார்.

தமிழக பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு – அரசின் அதிரடி உத்தரவு!

Exams Daily Mobile App Download

பெங்களூருவில் கடந்த 6ம் தேதி முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை 24 சதவீதமாக உயர்த்துவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!