நாளை (ஏப்ரல் 22) அரசு பொது விடுமுறை அறிவிப்பு – உயர்நீதிமன்றம் மூடல்! இதற்காக தான்!
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நாளை (ஏப்ரல் 22) முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தல் நடப்பதை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் உயர்நீதிமன்றம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் மாநில அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
பொது விடுமுறை
கடந்த மார்ச் 31ம் தேதி நடக்கவிருந்த கவுகாத்தி முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தல் ராங்ஹோலி பிஹு பண்டிகையை முன்னிட்டு இம்மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 19 முதல் 22ம் தேதி வரை நடத்தப்பட்டு வரும் தேர்தலை முன்னிட்டு 100% வாக்குகளை பதிவு செய்ய அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த வரிசையில் நாளை (ஏப்ரல்.22) ஒரு நாள் மட்டும் கவுகாத்தி உயர்நீதிமன்றம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.62,000 ஊதியத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
இது குறித்த உத்தரவில், ‘கவுகாத்தி முனிசிபல் கார்ப்பரேஷன் (ஜிஎம்சி) தேர்தலையொட்டி, முதன்மை இருக்கைக்கு ஏப்ரல் 22, 2022 விடுமுறை அளிக்கப்படும். மேலும் கவுகாத்தி உயர்நீதிமன்றம் ஏப்ரல் 22க்கு பதிலாக ஜூன் 18 அதாவது மூன்றாவது சனிக்கிழமை அன்று நீதிமன்ற வேலை நாளாக செயல்படும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வகையில் ஏப்ரல் 22ம் தேதி விடுமுறையை ஈடுகட்ட கவுகாத்தி உயர்நீதிமன்றம் ஜூன் மாதம் 18ம் தேதியன்று வேலை நாளாக செயல்பட இருக்கிறது.
ExamsDaily Mobile App Download
இதற்கு முன்னதாக அலுவலகங்களுக்கான பொது விடுமுறை குறித்து அசாம் மாநில அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘NI சட்டத்தின் கீழ், கவுகாத்தி முனிசிபல் கார்ப்பரேஷன் பகுதிக்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் அனைத்தும் ஏப்ரல் 22ம் தேதியன்று பொது விடுமுறையை முன்னிட்டு மூடப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.