தமிழகம் முழுவதும் நாளை 14-வது மெகா தடுப்பூசி முகாம் – அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் ஒமிக்ரான் பரவல் தொற்று அதிகரிக்காமல் இருப்பதால் தமிழகம் முழுவதும் அநேக இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து நாளை 50 ஆயிரம் மையங்களில் 14-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. அதனை தடுக்க தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அரசால் நடத்தப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தமிழகத்தில் நடைபெறும் 14-வது மெகா தடுப்பூசி முகாம் ஆகும். இந்த முகாமில் சுமார் 2 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
தற்போது வரை 7 கோடியே 24 லட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அத்துடன் இன்னும் ஒரு கோடி பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ளாமல் உள்ளன. மேலும் 80 லட்சம் பேர் 2-வது தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ளாமல் உள்ளன. இதனை தொடர்ந்து கடந்த வாரம் நடைபெற்ற முகாமில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதே போல் நாளை நடைபெற உள்ள முகாமிலும் ஏராளமான தடுப்பூசிகளை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அத்துடன் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடக்கூடிய ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் டிச.14 உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
அதனால் தடுப்பூசி முகாம்கள் தற்போது சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் சனிக்கிழமை என்பதால் பள்ளிகளில் முகாம்களை நடத்த முடியவில்லை. மற்ற இடங்களில் மட்டுமே முகாம்கள் நடத்தப்பட உள்ளன. மேலும் சென்னை மாநகராட்சியில் நாளை 1600 மையங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் சென்னை மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன. அத்துடன் தற்போது ஓமைக்காரன் தொற்று பரவல் காரணமாக மக்கள் பெரும் அச்சத்துடன் இருக்கின்றன.
TCS iON தேசிய தகுதித் தேர்வு – டிச.15 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
இதனால் தானாக முன் வந்து பல பேர் தடுப்பூசியை செலுத்தி கொள்கின்றன. இவ்வாறு 2 டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்வதன் மூலம் உயிரிழப்பில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். அதனால் அனைவரும் காலதாமதமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தை கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் அவர்கள் தெரிவித்துள்ளார்.